"விஜயகாந்த்துக்கு வீழ்ச்சியே இல்லை" - பிரேமலதா எழுச்சிப் பேச்சு
தமிழக அரசியலில் கேப்டன் விஜயகாந்த்கு வீழ்ச்சி என்பதே இல்லை, என்றுமே தேமுதிக எழுச்சியோடு செயல்படும் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் நடைபெற்ற தேமுதிக நிர்வாகி இல்ல திருமண விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, பிரேமலதா பேசுகையில், நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் கேப்டன் முன்பு முள்பாதை, மலர் பாதை என இரண்டு தெரிந்தது.
ஆனால், நமது கேப்டன் மிகத் தைரியமாகவே முள்பாதையை தேர்வு செய்தார். முள்பாதையில் நடந்து செல்பவர்கள் வெற்றி பெறுவார் என்பது வரலாறு.
தோல்வியைக் கண்டு கலங்கக் கூடாது, நாம் பல மடங்கு தைரியத்தோடு எதிர்நீச்சல் போட வேண்டும். பல மடங்கு தைரியத்தோடு எதிர் நீச்சல் போட வேண்டும். கடவுள் நல்லவர்களுக்கு சோதனை தருவார் ஆனால் கைவிட மாட்டார் என்று பஞ்ச் வைத்து முடித்தார்.
Labels:
other
,
politics