தேமுதிகவில் வெடித்தது குடும்ப அரசியல்: கேள்வி கேட்ட நிர்வாகி, கொந்தளித்த விஜயகாந்த்!

Share this :
No comments


நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் படுதோல்வியடைந்த தேமுதிக அதில் இருந்து மீண்டு வர பல கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறது. இதில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் தேமுதிகவின் குடும்ப அரசியலை பற்றி ஒரு நிர்வாகி கேள்வி கேட்டதாக கூறப்படுகிறது.

சட்டசபை தேர்தலின் போது தேமுதிக, திமுக உடன் கூட்டணி வைக்கும் என பெரிதும் எதிர் பார்க்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் முதல் தேமுதிக தொண்டர்கள் வரை அதை தான் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் அமைந்த கூட்டணியோ அனைவரது எதிர்பார்ப்பையும் தவிடு பொடியாக்கியது. மக்கள் நல கூட்டணியுடன் கூட்டணி அமைத்த தேமுதிக தேர்தலில் மிக மோசமான தோல்வியை சந்தித்தது.

திமுக உடன் தேமுதிக கூட்டணி வைத்திருந்தால் நல்ல வெற்றியை பெற்றிருக்கும், கட்சிக்கு இப்படி ஒரு நிலமை வந்திருக்காது. திமுக உடன் கூட்டணி அமையாததற்கு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தான் காரணம் என பரவலாக பேசப்பட்டது. மேலும் அவரது மச்சான் சுதீஷின் தலையீடும் கட்சியில் இருப்பதாக பேசப்பட்டது.

இந்நிலையில் இந்த விவகாரம் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் வெளிப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய மதுரை நிர்வாகி ஒருவர், நீங்கள் எல்லாவற்றிற்கும் எங்களை அழைத்து ஆலோசனை நடத்துகிறீர்கள். ஆனால், குடும்ப உறுப்பினர்கள் பேச்சைக் கேட்டு, கூட்டணி முடிவை எடுக்கிறீர்கள். இதனால், நம் பலம் வீணாகி விட்டது என அந்த நிர்வாகி ஆதங்கப்பட்டதாக பேசப்படுகிறது.

இதனை கேட்ட விஜயகாந்த் கோபமடைந்து, இங்கு வந்திருக்கும் பலர் கட்சி தாவ முடிவு செய்துள்ளது எனக்கு தெரியும், அந்த தைரியத்தில் தான் இப்படி பேசுகிறீர்கள். கட்சியை எப்படி வளர்ப்பது என்பது எனக்கு தெரியும், நீங்கள் கிளம்புங்கள் என ஆவேசமாக விஜய்காந்த் கூறிவிட்டு வெளியேறியதாகவும் தேமுதிக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

No comments :

Post a Comment