அங்க அடிச்சா இங்க வலிக்கும் - கருணாநிதிக்கு திகில் காட்டிய பாஜக அரசு
முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி கடும் மோதலை அடுத்து, கருணாநிதிக்கு பாஜக அரசு திகில் காட்டியுள்ளது.
இந்தியா முழுவதும் என்எஸ்ஜி எனப்படும் கமாண்டோ படை பாதுகாப்பு முக்கிய அரசியல் தலைவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். இந்தியா முழுமைக்கும் சுமார் 15 அரசியல் தலைவர்களுக்கு இது போன்று வழங்கப்படுகிறது.
இதில், திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி மற்றும் இரண்டு பேரின் இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவல் அறிந்த கருணாநிதி கடும் கொதிப்பில் உள்ளாராம்.
தமிழகத்தில் ஆளும் அதிமுகவுக்கு திமுக அதிக அழுத்தம் கொடுப்பத்தன் காரணமாகவே, மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment