டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா நிர்ப்பந்த கொலை: யுவராஜ் பரபரப்பு பேட்டி

Share this :
No comments


பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜ் நிபந்தனை ஜாமீனில் இன்று மதியம் விடுதலை செய்யப்பட்டார்.


கடந்த 2014-ஆம் ஆண்டு பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ரெயில் தண்டவாளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த டிஎஸ்பி விஷ்ணுபிரியாவும் தற்கொலை செய்து கொண்டார்.

இதனால், இரண்டு வழக்கையும் இணைத்து சிபிசிஐடி காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்குகளில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜை சிபிசிஐடி காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர்

தேடப்பட்டு வந்த யுவராஜ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி நாமக்கல் சிபிசிஐடி அலுவகத்தில் சரண் அடைந்தார். இதனால், நாமக்கல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி, சிபிசிஐடி போலீலார் அவரிடம் விசாரணை நடத்தினர். பின்பு 19-ஆம் தேதி, மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

யுவராஜுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்தது நீதிமன்றம். திருநெல்வேலி காவல் நிலையத்தில் தினமும் காலை, மாலை ஆஜராகி கையெழுத்திடவேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து யுவராஜ் நிபந்தனை ஜாமீனில் இன்று மதியம் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த யுவராஜ் டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கை திசை திருப்பவே என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்றும் விஷ்ணுப்பிரியா நிர்ப்பந்த கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் கோகுல்ராஜ் தற்கொலைதான் செய்து கொண்டார் என்பதையும் நிரூபிப்பேன் என்றும் கூறினார் யுவராஜ்.

No comments :

Post a Comment