முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு நன்றி: தேர்தல் வாக்குறுதி அனைத்தும் நிறைவேற்றப்படும்!
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பம் முதலே அதிமுக அமோகமாக முன்னிலை பெற்று வருகிறது. இதனால் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு நன்றி கூறியுள்ளார், வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என கூறிய ஜெயலலிதா. மக்கள் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் என கூறினார்.
மேலும், தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக மாற்ற உழைப்பேன், திமுகவின் பொய் பிரச்சாரத்தை மக்கள் பொடி பொடியாக்கிவிட்டனர். தமிழக மக்களுக்கு என்றும் கடமைப்பட்டவளாக இருப்பேன் என கூறிய ஜெயலலிதா, தமிழக மக்களுக்கு நன்றி கூற வார்த்தைகளே இல்லை என குறிப்பிட்டார்.
முன்னதாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இந்த வெற்றிக்கு பிரதமர் மோடி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறினார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment