சட்டசபை தேர்தலில் மு.க. அழகிரியின் ஆதரவு யாருக்கு தெரியுமா?
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி வரும் சட்டசபை தேர்தலில் யாருக்கு தன்னுடைய ஆதரவு என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
திமுகவில் பொருளாளர் மு.க.ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதலால், கட்சிக்கு எதிராக பேசி வந்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் மு.க.அழகிரி. இவர் அடிக்கடி திமுக பற்றியும், ஸ்டாலின் பற்றியும் அதிரடி கருத்துக்கள் கூறுபவர்.
தற்போது தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் மும்மரமாக உள்ளன.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் தானும், தன்னுடைய ஆதரவாளர்களும் யாருக்கும் ஆதரவு அளிக்க போவதில்லை என கூறியுள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போதும் இவர் திமுகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை, மாறாக திமுக படுதோல்வி அடையும் என கூறினார். இந்த முறை யாருக்கும் ஆதரவு இல்லை என கூறியுள்ளார் அழகிரி.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment