இதுதான் எனக்கு கடைசி தேர்தல்: கதறி அழுத துரைமுருகன்

Share this :
No comments


நேற்று முன்தினம் காட்பாடியில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கண்ணீர் விட்டு கதறி அழுதார். தனக்கு இதுதான் கடைசி தேர்தல் எனவும் கூறினார்.

காட்பாடி சட்டசபை தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய துரைமுருகன் தான் இந்த தொகுதிக்கு நிறைய செய்திருப்பதாகவும், ஆனாலும் தனது நெஞ்சில் ஒரு முள் குத்திக்கொண்டு இருப்பதாக கூறினார். இந்த தொகுதிக்கு ஒரு மருத்துவக் கல்லூரியை கொண்டுவருவதே அந்த முள் எனக்கூறிய அவர். ஆட்சி மாற்றத்தால் இந்த தொகுதிக்கு மருத்துவக்கல்லூரி கொண்டுவர முடியவில்லை என அவர் கூறினார்.

தனது தாயை விட இந்த தொகுதியை தான் அதிகம் நேசித்ததாக உணர்ச்சிவசப்பட்டு பேசிய அவர், ஒரு நாள் நான் இறந்த பிறகு என்னை தூக்கிக்கொண்டு போகும்போது, நான் இந்த தொகுதிக்கு செய்தவற்றை நீங்கள் நினைத்துப்பார்த்தால் போதும் என பேசியவர். இதுதான் தனக்கு கடைசி தேர்தல் என விம்மியழுதார்.

No comments :

Post a Comment