பாஜக எம்.பியை கன்னத்தில் அறைந்த இளைஞர் : விழாவில் பரபரப்பு

Share this :
No comments


ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு பாஜக எம்.பியை ஒரு இளைஞர் கன்னத்தில் அறைந்த சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் தொகுதியின் பாஜக எம்.பியான சோனாராம் சவுத்ரி, நேற்று ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்திருந்த ஒரு இளைஞருடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் கோபமடைந்த அந்த வாலிபர் எம்.பி. சோனாராமின் கன்னத்தில் அடித்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து, எம்.பி தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், எம்.பியின் கன்னத்தில் அறைந்த கர்தாராம் மற்றும் அவருடன் இருந்த பிரேமாராம் என்பவரையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒரு இளைஞர் பாஜக எம்.பியின் கன்னத்தில் அறைந்த விவகாரம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments :

Post a Comment