பெங்களூரில் 5 பஸ்கள் எரிப்பு: கார்மெண்ட்ஸ் தொழிலாளர்கள் போராட்டம்

Share this :
No comments


கர்நாடக தலைநகர் பெங்களூரில் ஆடைத் தயாரிப்பு தொழிலாளர்கள், மத்திய அரசு ஓய்வூதிய சேமிப்பு வைப்பு நிதி (பி.எப்)யை திரும்ப பெறுவதிற்கான விதிமுறையில் திருத்தம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 5 பஸ்களை எரித்துள்ளனர்.

பெரிய அளவில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி பெரும் கலவரத்தில் ஈடுப்பட்டனர். பெங்களூரில் நூற்றுக்கணக்கான ஆடை தொழிற்சாலைகள் உள்ளன. அதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆடைத் தயாரிப்பு தொழிலாளர்கள் வேலைச் செய்கின்றனர்.

ஆடைத் தயாரிப்பு தொழிலாளர்கள், அரசு வாகனங்கள் மற்றும் காவல் துறை வாகனங்களை எரித்ததுடன் நெடுஞ்சாலையில் மூன்று மணி நேர போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தினர்.
காவல் துறை கூட்டத்தை கட்டுப்படுத்த கண்ணீர்ப்புகை வீசி, தடியடி நடத்தியதில் பலரும் காயமடைந்தனர். கலவரத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கலவரத்திற்கு எந்த தேவையும் இல்லை என்றும், இதில் எந்த தலைவர்கள் இருப்பதாக தெரியவில்லை என்றும், காவல் துறை நிதானமாகச் செயல்பட்டு வருவதாக மாநில உள்துறை அமைச்சர் கூறினார்.

இந்த பெங்களூர் கலவரத்தினால் மத்திய அரசு தற்போதைக்கு சர்ச்சைக்குரிய சட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. இது ஊழியர்களுக்கான திரும்பப் பெறக்கூடிய ஓய்வூதிய சேமிப்பு வைப்பு நிதி ஆகும்.

No comments :

Post a Comment