அதிமுக தொண்டர்கள் நிறைந்த கட்சி; திமுக குண்டர்கள் நிறைந்த கட்சி: ஜெயலலிதா தாக்கு!

Share this :
No comments


சேலத்தில் இன்று தேர்தல் பரப்புரையை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா திமுகவை குண்டர்கள் நிறைந்த கட்சி என விமர்சித்தார்.

சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களையும், கேரளவில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களையும் ஆதரித்து சேலத்தில் இன்று பிரச்சாரம் செய்தார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.

திமுக ஆட்சி காலத்தில் காவல் துறையினரை அவர்கள் பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறிய ஜெயலலிதா, அதிமுகவில் தொண்டர்கள் அதிகம் இருக்கிறார்கள் அதேப்போல் திமுகவில் குண்டர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள் என்றார். திமுகவில் குண்டர்கள் இருக்கிறார்கள் என்பதை கருணாநிதியே சொல்லியிருக்கிறார் என அவர் குறிப்பிட்டார்.

மேலும் சேலத்தில் கடந்த ஆட்சியில் திமுகவினர் நில அபகரிப்பில் ஈடுபட்டதாகவும், அதனை அதிமுக ஆட்சியில் மீட்டதாகவும் ஜெயலலிதா குறிப்பிட்டார். நில அபகரிப்பில் ஈடுபட்ட திமுகவினர் வாக்கு கேட்டு வந்தால் அவர்களை விரட்டியடியுங்கள் என ஜெயலலிதா பேசினார்.

பின்னர் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார் ஜெயலலிதா. இந்த கூட்டத்தில் கேரளாவில் போட்டியிடும் வேட்பாளர்களையும் ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார்.

No comments :

Post a Comment