கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்த ரவீந்திர ஜடேஜா
இந்திய அணி மற்றும் குஜராத் லயன்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் வீரருமான ரவீந்திர ஜடேஜா தற்போதையை இந்திய கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமானவர். இவர் தனது தோழி ரிவா சோலாங்கியை கடந்த ஞாயிற்றுகிழமை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் கடந்த 2005-இல் இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற நினைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஜடேஜாவின் தந்தை ஒரு செக்யூரிட்டி ஏஜென்ஸில் பாதுகாவலராக பணிபுரிந்தார்.
2005-இல் தன்னுடைய 17 வயதில் ஒரு எதிர்பாராத விபத்தில் ஜடேஜாவின் தாயார் மரணமடைந்தார். இதனால் தனது சூழ்நிலை காரணமக ஜடேஜா கிரிக்கெட்டில் இருந்து விலக முடிவெடுத்தார். ஆனால் தன்னுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட ஊக்குவித்துள்ளனர் என ஜடேஜா கூறியுள்ளார்.
அதன் பின்னர் ஜடேஜா கிரிக்கெட்டில் விஸ்வரூபம் எடுத்தார். 2006 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை பேட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றார்.
2008-இல் ராஜஸ்தான் ஐபிஎல் அணியில் இடம்பெற்ற ஜடேஜா 2009-இல் இந்திய அணியில் இடம்பெற்றார். தற்போது இந்தியாவின் பிரபலமான கிரிக்கெட் வீரராக திகழ்கிறார்.
Labels:
News
,
sports
No comments :
Post a Comment