இடைத் தேர்தலில் மெஹபூபா முப்தி வெற்றி
சட்டப் பேரவை இடைத் தேர்தலில் காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முப்தி வெற்றி பெற்றுள்ளார். காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் தொகுதியில் நடைபெற்ற சட்டப் பேரவை இடைத் தேர்தலில் அந்த மாநில முதல்வர் மெஹபூபா முப்தி வெற்றி பெற்றுள்ளார். கடந்த ஜனவரி 7 ஆம் தேதி உடல் நலக் குறைவால் ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் முப்தி முஹமது சயீத் உயிரிழந்தார். இதனையடுத்து, புதிய முதல்வராக அவரது மகளும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி பதவிற்றுக் கொண்டார். இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி அனந்த்நாக் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், மக்கள் ஜனநாயகக் கட்சி - பாஜக கூட்டணி வேட்பாளரான மெஹபூபா முப்தி போட்டியிட்டார். அந்த தொகுதியின் வாக்கு பதிவு முடிந்து, இன்று காலை வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இறுதியில், 2 ஆயிரம் வாக்குகள் வித்தாயசத்தில் மெஹபூபா முப்தி வெற்றி பெற்றார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment