இறைவியை மலம் என கழுவி ஊற்றிய சாருநிவேதிதா
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான திரைப்படம் இறைவி. நேற்று வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பெரும்பாலும் இந்த படம் குறித்து நல்ல விதமான விமர்சனங்களே வந்தன.
ஆனால் இறைவி படம் மலம் என எழுத்தாளர் சாருநிவேதிதா மிகவும் காட்டமாக பதிவிட்டுள்ளார். இது குறித்து தனது இணையதளத்தில் பதிவிட்டுள்ள அவர், கையைக் காலைக் கட்டி மலக்கிடங்கில் போட்டது போல் இருந்தது.
இவ்வளவு ஆபாசமான, அருவருப்பான குப்பைப் படத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. பத்தே நிமிடத்தில் கிளம்பியிருப்பேன். ஆனால் இருட்டில் தடுக்கி விழுந்து விடலாம் எனப் பயந்ததால் இடைவேளை வரை அந்த மலக்கிடங்கில் கிடந்து விட்டு வந்தேன். மை காட், எப்பேர்ப்பட்ட கொடூரம்! விரிவான விமர்சனம் நாளை எழுதுகிறேன். என சாருநிவேதிதா கூறியுள்ளார்.
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment