டெல்லியில் இளம்பெண் காரில் கடத்தி கற்பழிப்பு

Share this :
No comments

தெற்கு டெல்லியில் இளம்பெண் காரில் கடத்தி கற்பழித்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை தேடி வருகின்றனர்.

புதுடெல்லி:

டெல்லியில் பெண்ணை காரில் கடத்தி 3 பேர் கற்பழித்து உள்ளனர். இந்த சம்பவம் பற்றி வருமாறு:–

தெற்கு டெல்லி பகுதியில் உள்ள உணவு விடுதி முன்பு 21 வயது பெண் நின்று கொண்டு இருந்தார்.

அப்போது 3 பேர் காரில் வந்தனர். அந்த பெண்ணை காரில் ஏறுமாறு வற்புறுத்தினர். அவர் மறுத்தார். அவர்களில் ஒருவன் அந்த பெண்ணை காரில் இழுத்து போட்டான்.

பின்னர் அந்த பெண்ணை 3 பேரும் காரில் கடத்தி சென்றனர். ஓடும் காரிலேயே அந்த பெண்ணை கற்பழித்தனர். 2 மணி நேரம் அந்த பெண்ணை காரில் வைத்து கற்பழித்து மேம்பாலம் அருகே உள்ள குப்பை மேட்டில் வீசியுள்ளனர்.

இது தொடர்பாக பாதிப்புக்கு உள்ளான அந்த பெண் போலீசில் புகார் கொடுத்தார். அவர்கள் யார் என்ற விவரம் அந்த பெண்ணுக்கு தெரியவில்லை. ஆனால் கடத்தி சென்ற காரின் நம்பரை அறிந்து இருந்தார். இதுபற்றி போலீசுக்கு தெரிவித்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை கற்பழித்த 3 பேரை தேடி வருகிறார்கள். போலீஸ் உயர் அதிகாரி கூறும் போது, ‘குற்றவாளிகள் 3 பேரை அடையாளம் கண்டுள்ளோம்‘. ஆனால் அவர்களை இன்னும் கைது செய்யவில்லை. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்கு மூலம் வாங்கிய பிறகு அவரை போலீசார் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

No comments :

Post a Comment