கவலை வேண்டாம்... அவங்க தொடங்கிட்டாங்க

Share this :
No comments


கொரியன் படத்தை காப்பியடித்து யாமிருக்க பயமே எடுத்த இயக்குனர் டிகேயின் அடுத்த காப்பியம், கவலை வேண்டாம்.
ஜீவா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சுனைனா என்று நட்சத்திரப் பட்டாளத்துடன் தொடங்கப்பட்ட இந்த படம் குறித்து பல மாதங்களாக தகவல் இல்லை. சத்தமில்லாமல் ட்ராப் செய்திட்டாங்களோ என்று நினைக்கும் அளவுக்கு பின்ட்ராப் சைலன்ஸ்.

இந்நிலையில் கோத்தகிரியில் இன்று படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியிருக்கிறார்கள்.

நாலு மாதத்துக்கு முன்பே தொடங்கியிருக்க வேண்டிய ஷெட்யூல்ட் தேர்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் காரணமாகவும், நான்கு முக்கிய நடிகர்களை ஒன்றிணைக்க வேண்டியிருந்ததாலும் இவ்வளவு நாள் தள்ளிப் போயிற்று என்று சமாதானம் சொல்லப்பட்டாலும் பைனான்ஸ் பிரச்சனையே முக்கிய காரணம் என்கிறார்கள்.

எப்படியோ கோத்தகிரியில் தொடங்கிய படப்பிடிப்பை அப்படியே சென்னையில் தொடர்ந்து ஒரேயடியாக முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

திட்டம் செயலாக்கமாக, வாழ்த்துகள்...

No comments :

Post a Comment