கைதிகள் நடத்தும் எப்.எம். ரேடியோ: விரைவில் ஒலிபரப்பு
மராட்டிய மாநிலத்தில் உள்ள தானே சிறையில் கைதிகளே நடத்தும் எப்.எம். ரேடியோ விரைவில் தொடங்கவுள்ளது. மராட்டிய மாநிலத்தில் உள்ள தானே சிறையில் கைதிகளே நடத்தும் எப்.எம். ரேடியோ இன்னும் 15 நாட்களில் தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வானொலி சேவையை சிறை கைதிகள் மட்டுமின்றி தானே மற்றும் மும்பை நகர மக்களும் கேட்டு ரசிக்க முடியும் என சிறை சூப்பிரண்ட் ஹிராலால் ஜாதவ் தெரிவித்துள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மூலம் இந்த ஒலிபரப்பை தொடங்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment