ஒரே நாளில் 30 ஆண்களுடன் படுக்கை, 43200 முறை பலாத்காரம்: பெண் வழக்கறிஞர்

Share this :
No comments

கர்லா ஜாசின்டோ என்ற இந்த பெண் மனித கடத்தலுக்கு எதிரான வழக்கறிஞராக பணி புரிந்து வருகிறார். இவருடைய கடந்த கால வாழ்க்கை மிகவும், கொடூரமாகவும், ஆண்களால் சீரழிக்கப்பட்ட ஒரு நரக வாழ்க்கையாகவே இருந்துள்ளது. தன்னுடைய 12 வயதில் இவர் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டு விபச்சாரத்துக்கு தள்ளப்பட்டர். மிகவும் இக்கட்டான அந்த சிறு வயதிலேயே இதுபோன்ற மிருகத்தனமான சூழ்நிலைகளை சந்தித்துள்ளார். தன்னுடைய வாழ்க்கையில் 43200 முறை பலாத்காரம் செய்யப்பட்டுள்ளேன் எனவும் 4 ஆண்டுகளாக ஒரு நாளுக்கு 30 ஆண்களுடன் கட்டாயமாக படுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன் என அவர் கூறியுள்ளார். காலை 10 மணிக்கும் ஆரம்பிக்கும் அவர்கள் என்னை நள்ளிரவு வரை அனுபவிப்பார்கள். எனக்கு தூக்கம் வந்தாலும் என்னை விடாமல் அவர்கள் ஆசைக்கு பயன்படுத்துவார்கள். என்னை கடத்தியவனுடன் மூன்று மாதங்கள் தங்கியிருந்தேன். அப்பொழுது என்னை அனுபவிக்க வந்தவனில் ஒருவன் என் கழுத்தில் முத்தமிட்ட தடம் அதில் இருந்தது. அதை பார்த்த அந்த கடத்தல்காரன் என்னை மிகவும் கொடூரமாக தாக்கினான். சங்கிலியால் என் உடல் முழுவதும் அடித்தான், தன்னைடைய உள்ளங்கையால் தாக்கி, குத்தினான், முகத்தில் அவனுடைய எச்சிலை துப்பினான், என் தலை முடிகளை இழுத்து துன்புறுத்தினான், இரும்பு கம்பிகளால் என்னை சிதைத்தான் என தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறினார் கர்லா ஜாசின்டோ. இப்படி கொடூரமாக உடலாலும், மனதாலும் துன்பப்பட்டு வந்த கர்லா ஜாசின்டோ அதில் இருந்து மீண்டு, தப்பித்து வந்து தற்போது மனித கடத்தலுக்கு எதிரான ஒரு வழக்கறிஞராக தனது பணியை பெருமையுடன் செய்து வருகிறார்.

No comments :

Post a Comment