அடம் பிடித்த விஜயகாந்த், சமாதானப்படுத்திய பிரேமலதா...! இது வேட்புமனு களேபரம்
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தபோது தேமுதிக தலைவர் விஜயகாந்த் உறுதிமொழி ஏற்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்ட அவரது மனைவி பிரேமலதா சமாதானப்படுத்திய பின்னர் விஜயகாந்த் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதியில் தே.மு.தி.க– மக்கள் நல கூட்டணி– த.மாகா. சார்பில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் போட்டியிடுகிறார். அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய உளுந்தூர்பேட்டையில் உள்ள விருந்தினர் மாளிகையில் இருந்து வேனில் ஊர்வலமாக தாலுகா அலுவலகத்துக்கு புறப்பட்டார். அப்போது வழி நெடுகிலும் அவரது கட்சி தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விஜயகாந்துடன் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், மாநில இளைஞரணி செயலாளர் சுதீஷ், மாவட்ட செயலாளர் வெங்கடேசன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜெயசங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சி முகமது யூசுப் ஆகியோர் வந்திருந்தனர். மதியம் 1.30 மணி அளவில், தேர்தல் நடத்தும் அலுவலர் முகுந்தனிடம் விஜயகாந்த் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் உறுதிமொழி எடுத்துக்கொள்ளுமாறு கேட்டார்.
Labels:
comedy
,
politics
No comments :
Post a Comment