விஜயகாந்த் விவகாரம் - பாமக நிர்வாகிகளுக்கு கெடு வைத்த ராமதாஸ்

Share this :
No comments



தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் தொகுதியில் அவர் டெபாசிட் வாங்க கூடாது என பாமக நிர்வாகிகளுக்கு அக்கட்சி தலைமை கெடு விதித்துள்ளது.

நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தலில் தேமுதிக - தமாகா- மக்கள் நலக்கூட்டணி ஆகியோர் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. பாமக சிறுகட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த தேர்தலில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் அங்கு பாமக வேட்பாளராக நிறுத்தபட்ட இரா.ராமமூர்த்தியை வீட்டுக்கு அனுப்பிவைத்த்த பாமக தலைமை, இதற்கு பதில் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞரும், பாமக செய்தித் தொடர்பாளரும், பாமக வழக்கறிஞர் பிரிவு தலைவருமான பாலுவை அறிவித்துள்ளது.

உளுந்தூர்பேட்டை வன்னியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஒன்றாகும். இங்கு நின்று விஜயகாந்த் வெற்றி பெற்றால் பாமக பலம் இல்லாத கட்சியாக அரசியல் வட்டாரத்தில் பார்வை விழும்.

எனவே, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெற்றி பெறக் கூடாது. குறிப்பாக டெபாசிட் கூட வாங்க கூடாது என பாமக நிர்வாகிகளுக்கு அக்கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளதாம். அவ்வாறு விஜயகாந்த் வெற்றி வெற்றாலோ அல்லது டெபாசிட் வாங்கினாலோ அந்த தொகுதியில் உள்ள பாமக நிர்வாகிகள் கூண்டோடு நீக்கப்பட்டுவார்கள் என அக்கட்சி தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளாம். இதனால், உளுந்தூர்பேட்டை பாமக நிர்வாகிகள் கலகத்தில் உள்ளனர். இந்த தகவல் அறிந்த தேமுதிக வட்டாரமும் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளதாம்.

No comments :

Post a Comment