கனிமொழி அட்டாக் - இறங்கிவந்த ஜெயலலிதா
அதிமுக தேர்தல் பிரச்சார நேரத்தை மாற்றி அமைத்தார் அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா.
தமிழகத்தில் அதிமுக தலைமையில் 7 கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக முதல்வர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
முதல்வர் ஜெயலலிதா ஜோதிடத்திலும், ஆன்மீகத்திலும் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். இதனால், அவரது ஜோதிடர் குறித்துக் கொடுத்த நேரத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த நிலையில், விருத்தாச்சலம் அதிமுக தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் இருவர் உயிரிழந்தனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
குறிப்பாக, முதல்வர் ஜெயலலிதா குளுகுளு ஏசி மேடையில் இருந்து தேர்தல் பிரசாரம் செய்வதாகவும், பொது மக்கள் கடும் வெயில் இருந்து வாடுவதாகவும், திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தனது பிரச்சார நேரத்தை மாற்றியுள்ளார்.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரம் மாலை 6 மணியளவிலேயே நடைபெற்றது. இனிமேல் நடைபெறும் தேர்தல் பிரசாரம் மாலை 6 மணி அளவில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment