பித்தம், அஜீரணம், வாய்க்கசப்பை போக்கும் தனியா பத்திய குழம்பு

Share this :
No comments

உடல் அலுப்பு, பித்தம், அஜீரணம், வாய்க்கசப்பு போன்ற எந்தப் பிரச்சனைகளை பத்தியக் குழம்பு நீக்கும். தனியா பத்திய குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தனியா (கொத்தமல்லி விதை) - 3 ஸ்பூன்,

கடலைப் பருப்பு - ஒரு ஸ்பூன்,

உளுத்தம் பருப்பு - ஒரு ஸ்பூன்,

கடுகு - ஒரு ஸ்பூன்,

எள்ளு - ஒரு ஸ்பூன்,

மிளகு - ஒரு ஸ்பூன்,

நெய் - ஒரு ஸ்பூன்,

மிளகாய் வற்றல் - 2,

புளி - கோலிகுண்டு அளவு,

பெருங்காயம், மஞ்சள் தூள் - சிறிதளவு,

கறிவேப்பிலை - ஒரு ஆர்க்,

எண்ணெய் - 2 ஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

* கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் தனியா, கடலைப் பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு இவற்றைத் தனித்தனியே வறுத்துப் ஆற வைத்து பொடித்துக்கொள்ளவும்.

* புளியை திக்காகக் கரைத்து கொள்ளவும்.

* அடிகனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் கரைத்த புளியை ஊற்றி நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் அதில் மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம், அரைத்தப் பொடியைப் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

* எல்லாம் கொதித்து வாசனை வந்து கெட்டியானதும் இறக்கி விடவும்.

* கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் கடுகு, எள், கறிவேப்பிலை தாளித்துக் குழம்பில் கொட்டவும்.

* இதைச் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம். இதை மண் சட்டியில் செய்தால் இன்னும் சுவை கூடும். மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

No comments :

Post a Comment