கறிவேப்பிலை குழம்பு செய்முறை விளக்கம்

Share this :
No comments

சுவையான சத்தான கறிவேப்பிலைக் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள் :

கறிவேப்பிலை - 1 கப்

மிளகு - 1 தேக்கரண்டி

மணத்தக்காளி வற்றல் - 2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி

கடலைபருப்பு - 2 தேக்கரண்டி

சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி

மஞ்சள்பொடி - தேவையான அளவு

புளி - பெரிய எலுமிச்சம்பழம் அளவு

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி

கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க

செய்முறை :

* புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

* மிளகு, உளூத்தம்பருப்பு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பை சிறிது எண்ணெய்யில் வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் புளி கரைசலுடன் அரைத்த விழுது, மஞ்சள் தேவையான தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, மணத்தக்காளி வற்றலை போட்டு தாளித்த பின் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும்.

* குழம்பு நன்றாக கொதித்து எண்ணெய் ஓரங்களில் வந்து பக்குவம் வந்ததும் இறக்கி பரிமாறவும்.

* மணத்தக்காளிக்குப் பதில் சுண்டைக்காய் வற்றலும் போடலாம்.

No comments :

Post a Comment