மிளகு காரச் சட்னி செய்முறை விளக்கம்

Share this :
No comments

இட்லி, தோசைக்கு சுவையான மிளகு காரச் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தக்காளி - 5 (பெரியது)

காய்ந்த மிளகாய் - 4

மிளகு - 1 தேக்கரண்டி

பெருங்காய தூள் - சிறிதளவு

நல்லெண்ணெய் - 2 குழிக்கரண்டி

கடுகு, உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 2 ஆர்க்கு

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :

* தக்காளியை பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

* வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகாயை சிவக்க வறுத்து எடுக்கவும்.

* அடுத்து அதில் மிளகை போட்டு வெடித்ததும் உடனே எடுத்துக் விடவும். (மிளகாயை எடுத்ததும் அடுப்பை அணைத்துவிட்டு மிளகை போடவும். இல்லையென்றால் வெடித்து சிதறும்.)

* வாணலியில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி, பெருங்காய துள் தூவி, தக்காளியை போட்டு உப்பு சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக குழைய வதங்க வேண்டும். வதங்கிய பின்னர் எடுத்து, வறுத்த எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

* தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து வெடித்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து, அரைத்த சட்னியில் கொட்டி கலந்து விடவும்.

* சுவையான மிளகு கார சட்னி தயார்.

* இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

No comments :

Post a Comment