வாய்ப்புண்ணை குணமாக்கும் மணத்தக்காளிக் கீரை மண்டி

Share this :
No comments

வாய்ப்புண் இருப்பவர்கள் இந்த அடிக்கடி மணத்தக்காளி கீரையை உணவில் சேர்த்து கொள்ளலாம். இப்போது மணத்தக்காளிக் கீரை மண்டி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மணத்தக்காளிக் கீரை - ஒரு கட்டு,

சின்ன வெங்காயம் - 10,

பூண்டு - 6,

கெட்டியான முதல் தேங்காய்ப் பால் - அரை கப்

இரண்டாம் பால் - அரை கப்,

அரிசி கழுவிய தண்ணீர் (மண்டி) - அரை கப்,

உப்பு - ருசிக்கேற்ப.

தாளிக்க:

எண்ணெய் - 2 டீஸ்பூன்,

கடுகு - ஒரு டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய் - 1,

வெந்தயம் - அரை டீஸ்பூன்.

செய்முறை:

* கீரையைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

* வெங்காயத்தை தோல் உரித்து இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.

* குக்கரில், எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் சிறிது வதங்கியதும் இரண்டாம் பால், அரிசி மண்டியைச் சேர்த்து, உப்பு போட்டு, நன்றாகக் கொதிக்கவிடவும்.

* இதில் கீரையைப் போட்டு, மூடி இரண்டு விசில் வந்ததும் இறக்கி, முதல் பாலைச் சேர்க்கவும்.

* ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்பு: இந்த மண்டியை, சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். வாய்ப் புண்ணுக்கும் இது நல்லது.

No comments :

Post a Comment