மனதை அமைதிப்படுத்தி நினைவு திறனை அதிகரிக்க இந்த 2 இடத்துல அழுத்துங்க...
அனைவரும் அக்குபிரஷர் சிகிச்சை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த சிகிச்சையின் ஸ்பெஷலே, உடலின் தீர்க்கரேகைகளைக் கண்டுப்பிடித்து, அவ்விடத்தில் அழுத்தம் கொடுத்து, பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது. அக்குபிரஷர் போன்றே அக்குபஞ்சர் என்ற சிகிச்சை ஒன்று உள்ளது.
ஆனால் இந்த சிகிச்சைக்கு ஊசி பயன்படுத்தப்படும். அதேப் போல் அக்குபிரஷர் சிகிச்சையை விட அக்குபஞ்சர் சிகிச்சையினால் வலியை உணரக்கூடும்.
இப்போது நாம் பார்க்கப்போவது அக்குபிரஷர் சிகிச்சையின் மூலம் எப்படி ஒருவரது கவனம் குவித்தல் மற்றும் நினைவுத் திறனை அதிகரிப்பது பற்றி தான். அதற்கு உடலின் இந்த 2 பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
என்ன நம்பமுடியவில்லையா? ஆம், உண்மையிலேயே கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு இடத்தில் அழுத்தம் கொடுத்து வந்தால், ஒருவரது கவனம் குவித்தல் மற்றும் நினைவுத் திறன் அதிகரிப்பதோடு, மனநிலையும் மேம்படுத்தப்படும்.
கால்
படத்தில் காட்டியவாறு பெருவிரல் மற்றும் அதற்கு அருகில் உள்ள விரலுக்கு மேலே கைப் பெருவிரல் கொண்டு 3-4 நிமிடம் மென்மையாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.
பின் ரிலாக்ஸ் ஆக வேண்டும் மற்றும் மீண்டும் அழுத்த வேண்டும். இப்படி 4-5 முறை ஒரு நாளைக்கு செய்து வந்தால், ஒருவரின் கவனம் செலுத்துதல் மற்றும் விஷயங்களை நினைவில் கொள்ளும் திறன் மேம்படுத்தப்படும்.
இரு புருவங்களின் முனைகள்
படத்தில் காட்டியவாறு இரு புருவங்கள் முடியும் பகுதிக்கு சற்று பின்புறத்தில் நடுவிரல்களைக் கொண்டு 3 நிமிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 4-5 முறை செய்து வந்தால், கவனம் செலுத்தும் தன்மை அதிகரிப்பதோடு, மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கிடைத்து, உடல் மற்றும் மனம் ரிலாக்ஸாக இருக்கும்.
Labels:
health
No comments :
Post a Comment