இன்றைய காலகட்டத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவர் பெரிய படிப்பு படிப்பது என்பது கடினமான ஒரு விஷயம். அவரின் படிப்பிக்கு பின் தாய், தந்தையரின் கடின உழைப்பு இருக்கும்.அப்படி இக்கதையிலும் ஒருவன் நன்றாக படித்து தாய், தங்கையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறான், அதற்காக நன்றாகவும் படிக்கிறான். ஆனால் நடுவில் நடக்கும் சில சம்பவங்களால் தான் செய்வது தவறு என்று அறிந்தும், கோழையாகி மாறி தற்கொலையும் செய்துக் கொள்கிறான்.அவன் ஏன் இப்படி செய்துகொள்கிறான் என்பதே கதையின் முக்கிய கரு. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த கதை போல் தற்போதும் பல இடங்களில் நடக்கிறது.ஜோயலின் இந்த முயற்சி கண்டிப்பாக அனைவரையும் போய் சேரவேண்டும்.
No comments :
Post a Comment