Tuesday, May 24, 2016

அப்படிபோடு....ஜெயலலிதாவின் அடுத்த சாதனை



ஒரே தேதியில் இரண்டாவது முறையாக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்று மீண்டும் ஒரு சாதனை படைத்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு, சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் பதவி இழந்தார். பின்பு, ஜாமீனில் வெளியே வந்த ஜெயலலிதா மே மாதம் 23 ஆம் தேதி தமிழக முதல்வராக 5ஆவது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், நடைபெற்று முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் அமோகமாக வெற்றி பெற்றதை அடுத்து, அதே மே 23 ஆம் தேதி தற்போது 6 ஆவது முறையாக முதல்வராக பதவியேற்று சாதனை படைத்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும், தமிழக அரசியில் வரலாற்றில், சட்டசபை தேர்தலில் 1984 ஆம் ஆண்டுக்கு பின்பு தற்போதுதான் ஒரு கட்சி இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment