ஸ்டாலினுக்கு பின்வரிசையா..? ஜெயலலிதா திருந்தவே இல்லை..! - கருணாநிதி ஆவேசம்
எதிர்க்கட்சி வரிசையிலே அமரும் தகுதியைப் பெற்ற ஸ்டாலினுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் போட்டுவிட்டு, தேர்தலில் தோற்றுப் போன சரத்குமாருக்கு முதல் வரிசையில் இடம் போட்டு அமர வைத்து திமுகவை திட்டமிட்டு அவமானப்படுத்திய ஜெயலலிதா இன்னும் திருந்தவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "23.5.2016 அன்று சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்ற அரசு விழாவில், அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், 89 இடங்களைப் பெற்று பிரதான எதிர்க்கட்சி வரிசையிலே அமரும் தகுதியைப் பெற்ற மு.க.ஸ்டாலினுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் போடப்பட்டு,
அதே தேர்தலில் தோற்றுப் போன சரத்குமாருக்கு முதல் வரிசையில் இடம் போட்டு, அமர வைத்து வேண்டுமென்றே திராவிட முன்னேற்றக் கழகத்தை திட்டமிட்டு அவமானப்படுத்திய ஜெயலலிதாவைப் பார்க்கும்போது இன்னும் அவர் திருந்தவில்லை, திருந்தப் போவதுமில்லை என்று தான் தெளிவாகப் புரிகிறது! தமிழ் மக்கள் அல்லவா திருந்த வேண்டும்!" என்று கூறியுள்ளார்.
Labels:
News
No comments :
Post a Comment