செட்டிநாடு பால் பணியாரம் செய்முறை விளக்கம்

Share this :
No comments

பால் பணியாரம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அருமையான ரெசிபி. இங்கு செட்டிநாடு பால் பணியாரத்தின் ஈஸியான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள் :

பச்சரிசி, உளுந்து - தலா ஒரு கப்,

பால் - அரை லிட்டர்,

திக்கான தேங்காய் பால் - ஒரு டம்ளர்

சர்க்கரை - ஒரு கப்,

ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,

எண்ணெய் - பொரிப்பதற்கு

உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:

* பச்சிரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து 2 மணி நேரம் ஊறவிட்டு, நைஸாக அரைத்து, உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும்.

* பாலைக் காய்ச்சி இறக்கி சிறிது ஆறியதும் தேங்காய் பால், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

* வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அடுப்பை மிதமாக எரியவிடவும்.

* மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொரித்தெடுத்து, இதை குளிர்ந்த நீரில் போட்டு எடுக்கவும்.

* பொரித்து வைத்த பணியாரங்களை பாலில் போட்டு 10 நிமிடம் கழித்து பரிமாறவும்.

குறிப்பு:

மாவு புளிக்கக் கூடாது. அரைத்த சிறிது நேரத்திலேயே செய்துவிடவும். பணியாரத்தை பாலில் அதிக நேரம் ஊறவிடக் கூடாது.

பரிமாறுவதற்கு 10 நிமிடம் முன்பு பாலில் சேர்க்கவும்.

விருப்பப்பட்டவர்கள் முந்திரி, பாதாம் சேர்த்துக்கொள்ளலாம்.

No comments :

Post a Comment