சுவையான சத்தான சிறுகீரை புலாவ்

Share this :
No comments

கீரையில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. கீரையை வைத்து எப்படி புலாவ் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சிறுகீரை - 1 கட்டு,

ப.மிளகாய் - 4

உப்பு - தேவைக்கேற்ப,

மஞ்சள் தூள், - 1/4 டீஸ்பூன்,

பட்டை - லவங்கம் - 2,

வெங்காயம் - 2

தக்காளி - 1

இஞ்சி, பூண்டு - 2 டீஸ்பூன்,

அரிசி - 11/2 ஆழாக்கு,

எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்

எண்ணெய் - 2 டீஸ்பூன்,

செய்முறை :

* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

* குக்கரில் எண்ணெய் சூடேற்றி, பட்டை, லவங்கம் போட்டு தாளித்த பின் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, ப.மிளகாயை போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் கீரை சேர்த்து வதக்கி பின் உப்பு, மஞ்சள் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

* அடுத்து அதில் அரிசியை போட்டு 3 கப் தண்ணீர் விட்டு குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விட்டு இறக்கவும்.

* விசில் போனதும் குக்கர் மூடியை திறந்து எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.

* சுவையான சத்தான கீரை புலாவ் ரெடி.

* எந்த கீரையிலும் இந்த புலாவை செய்யலாம். சுவையாக இருக்கும்.

No comments :

Post a Comment