ஒரு கிர்ணிப் பழத்தைத் தோல்நீக்கி, நறுக்கி, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து அரைத்துப் பால் சேர்த்து, ஐஸ் கட்டிகளைப் போட்டுப் பருகவும்.
பலன்கள்: அதிக அளவு பொட்டாசியம், கார்போ ஹைட்ரேட் இருக்கிறது. அதிகமான சக்தியைக் கொடுக்கும். ஓரளவு நார்ச்சத்தும், குறைந்த அளவு புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் கந்தகம் போன்றவையும் இருக்கின்றன.
* எல்லோருக்கும் ஏற்றது என்றாலும் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவும்.
--> தர்பூசணி கேரட் ஜூஸ்
500 கிராம் தர்பூசணி, 150 கிராம் கேரட் துருவியது, தோல் நீக்கித் துருவிய இஞ்சி 10 கிராம் இவற்றுடன் தேன், சர்க்கரை கலந்து குளிர்ந்த நீர் விட்டு, மிக்சியில் அரைத்து வடிகட்டவும். புதினா இலை வைத்து அலங்கரிக்கவும்.
பலன்கள்: தர்பூசணியுடன் கேரட், தேன் சேர்ப்பதால் சுவை அருமையாக இருக்கும். தர்பூசணியில் நார்ச்சத்து குறைவு. கேரட்டில் நார்ச்சத்து, பீட்டா கரோட்டீன் இருக்கிறது. கார்போஹைட்ரேட், நீர்ச்சத்து அதிக அளவு இருக்கிறது. வைட்டமின் சி, எனர்ஜி சிறிதளவு இருக்கின்றன.
* பொதுவாகச் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடவேண்டாம். காலை நேரத்தில் சர்க்கரை அளவு குறைந்தால் மட்டும் 100 மில்லி எடுத்துக் கொள்ளலாம். சிறுநீரக நோய் கட்டுக்குள் இருந்தால் 50 மி.லி. குடிக்கலாம். மற்றபடி எல்லோருக்கும் நல்லது.
--> கிரேப் ஜூஸ்
200 கிராம் கறுப்பு திராட்சை, தேவையான அளவு சர்க்கரை அல்லது வெல்லம் இவை இரண்டையும் மிக்சியில் அரைத்துத் துணியில் வடிகட்டிக் குளிர்ந்த நீர் விட்டு மீண்டும் அரைத்துப் பருகவும்.
பலன்கள்: குளுகோஸ் அளவு இதில் அதிகம். வைட்டமின் சி, பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம், மேங்கனீஸ் போன்ற தாது உப்புகள் சிறிதளவு இருக்கின்றன. கார்போஹைட்ரேட் இருப்பதால் நல்ல சக்தி கொடுக்கும். திராட்சை விதையில் மருத்துவக் குணம் அதிகம் இருப்பதால் ஜூஸ் தயாரித்து வடிகட்டாமல் அருந்துவது நல்லது. இதனால் நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் கிடைக்கும். திராட்சையில் பூச்சி மருந்து தெளித்து வருவதால் நன்றாகக் கழுவிவிட்டு உப்புத் தண்ணீரில் போட்டு எடுத்துப் பயன்படுத்துவது நல்லது.
* சிறுநீரக, சர்க்கரை நோயாளிகள் அருந்த வேண்டாம். இதய நோயாளிகளுக்கு நல்லது. ஏதாவது உடல்ரீதியான பிரச்னைகளுக்கு மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள், இந்த ஜூஸ் பருகியதும், உடனடியாக மருந்துகளை எடுத்துக் கொள்ளக்கூடாது.
No comments :
Post a Comment