மாவோயிஸ்ட் மனப்பான்மைதான் தமிழகத்தில் ஏற்படும் - வைகோ எச்சரிக்கை
மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெறாவிட்டால் கொள்ளைக்காக கூட்டணி அமைப்பதும், மாவோயிஸ்ட் மனப்பான்மையும் தான் தமிழகத்தில் ஏற்படும் என வைகோ தெரிவித்துள்ளார்.
தேமுதிக கூட்டணி வேட்பாளர் எல்.வெங்கடேசனை ஆதரித்து விழுப்புரத்தில் பேசிய வைகோ, ”மதிமுக, கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் இணைந்து புதிய இயக்கத்தை தொடங்கியபோது, இவர்கள் நீடிக்க மாட்டார்கள் என்றனர். விஜயகாந்த் திமுகவிடம் போய்விடுவார் என்றனர்.
விஜயகாந்துக்கு முதல்வராகும் தகுதி உள்ளதா என்றும் விவாதம் செய்கின்றனர். தொகுதிக்கு ரூ.50 கோடி தருவதாக பேரம் பேசியவர்களையெல்லாம் பொருட்படுத்தாமல், வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படாமல், எங்களிடம் வந்து சேர்ந்த உத்தமர் என்ற ஒரு தகுதி போதாதா அவருக்கு.
அடுத்ததாக அவர் நிதானமின்றி பேசுவாத கூறுகின்றனர். கருணாநிதி பேசுவது புரிகிறதா? ஊடகங்கள் இதை ஏன் எழுதவில்லை? நமக்கு நாமே பயணம் வந்தவர், மக்கள் பிரச்சினைகளுக்காக போராடினாரா? மதுவுக்கு எதிராகவும், ஆந்திர படுகொலை, இலங்கை படுகொலை என்று எதற்காக போராட்டங்களை நடத்தினார்?
மருத்துவக் காப்பீடு திட்டத்தில் திமுக அரசு ரூ.568 கோடியும், அதிமுக அரசு ரூ.600 கோடியும் கமிஷன் பெற்றுள்ளது. மதுஒழிப்பு பேசும், திமுக, அதிமுகவினர், மது விற்பனையில் தலா 15 சதவீதம் கமிஷனை பறிமாறிக் கொண்டவர்கள்.
வாக்குக்கு பணம் வழங்க தயாராகிவிட்டனர். அதனை தேர்தல் ஆணையம் தடுக்காது. வறுமையின் காரணமாக மக்களும் எதிர்பார்க்கின்ற நிலை உள்ளது. இதனை இளைஞர்கள் தான் எடுத்துக்கூறி மாற்ற வேண்டும்.
இப்போது இது நடக்காவிடில், எதிர்காலத்தில் 3ஆவது அணி வராது. கொள்ளைக்காக கூட்டணி அமைப்பதும், மாவோயிஸ்ட் மனப்பான்மையும் தான் தமிழகத்தில் ஏற்படும். இதை யோசித்து வாக்களிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment