எம்.ஜி.ஆர்., 5 காசு, உருட்டுக்கட்டை..! விஜயகாந்தின் கலகல

Share this :
No comments


தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. வேட்பாளர்களை ஆதரித்து தஞ்சையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசும்போது, ''முதலமைச்சராக விஜயகாந்துக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கிறார்கள். நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன்.

எனது அப்பா, அம்மா கிராமத்தில் பிறந்தவர்கள். முதலமைச்சராக இதைவிட என்ன தகுதி வேண்டும். விஜயகாந்த் செல்லும் இடங்களில் எல்லாம் யாரையாவது அடிக்கிறார் என்று கூறுகிறார்கள். தவறு எங்கு நடந்தாலும் தண்டிக்க தயங்க மாட்டேன். எனக்கு நடிக்க தெரியாது.

6 கட்சிகளை கொண்ட எங்கள் கூட்டணிக்கு என்றும் ஏறுமுகம் தான். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களோடு மக்களாக இருந்து ஆட்சி செய்வோம். உருட்டுக்கட்டையுடன் கூடிய ஆட்சி இருக்காது. தேர்தல் வரும்போது மட்டும்தான் முதலமைச்சர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆரை நினைத்து பார்க்கிறார்.

ஆனால் எனக்கு மானசீக குரு எம்.ஜி.ஆர். தான். மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். ஆட்சி செய்தார். அதேபோல் தான் நாங்களும் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று பாடுபடுகிறோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிப்படையான நிர்வாகம் இருக்கும். சட்டத்திற்கு உட்பட்டு தான் போலீசார் நடக்க வேண்டும். எங்கள் கூட்டணி கட்சி தொண்டர்களும் சட்டத்திற்கு உட்பட்டு தான் நடக்க வேண்டும். விஜயகாந்த் கடைசி வரை மக்களுக்காகவே வாழ்ந்தான் என்று இருக்க வேண்டும்.

பணம் கொடுத்து வாக்கு கேட்கலாம் என்று நினைக்கிறார்கள். அதிகாரிகளை வைத்து எதுவும் செய்யலாம் என்று நினைத்தார்கள். இப்போது அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றி கொண்டே இருக்கிறது. இந்த தேர்தலில் தர்மத்தின் பக்கம் நிற்பவர்கள் நாங்கள்.

அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் அதர்மத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு வாக்களிக்கமாட்டோம் என்று நீங்கள் உறுதிகொள்ள வேண்டும். நான் யாரிடமும் 5 காசுகூட வாங்காமல் சீட் கொடுத்து இருக்கிறேன். எங்கள் கூட்டணியில் இருப்பவர்கள் அப்பழுக்கற்றவர்கள்" என்றார்.

No comments :

Post a Comment