மே 16- சம்பளத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகார் கூற தொலைபேசி எண் அறிவிப்பு!
தேர்தல் நாளான மே 16ம் தேதி அன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது புகார்கள் தெரிவிக்க தொலைபேசி எண்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ்ரூபவ் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் மே 16ம் தேதி நடைபெறுவதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இத்தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் அனைத்து தகுதியுள்ள வாக்காளர்களும் வாக்களிப்பதற்கு ஏதுவாக அனைத்து வகையான நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் மக்கள் பிரிநிதித்துவ சட்டம் பிரிவு 135பி-ன்படி தேர்தல் நாளான 16.05.2016 அன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட வேண்டும்.
மேற்படி தினத்தில் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிப்பது தொடர்பாக புகார்கள் தெரிவிக்க ஏதுவாக மாநில மற்றும் மாவட்ட கட்டுப்பாட்டு அறைகள் தொழிலாளர் துறையால் துவக்கப்பட்டு அதன் விபரம் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் இதுதொடர்பான விபரங்கள் www.labour.tn.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment