செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?: மீண்டும் ஆரம்பித்தார் ஜெயலலிதா

Share this :
No comments


ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பொது மக்களை பார்த்து கேட்க்கும் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? என்ற வார்த்தை மிகவும் பிரபலம். கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் வரை அதனை உபயோகித்தார் அவர்.

ஆனால் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் அவர் இதனை உபயோகிக்கவில்லை. அதற்கு பதிலாக மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற வார்த்தையை உபயோகித்து வந்தார். இந்நிலையில் சேலத்தில் ஜெயலலிதா பங்கேற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மீண்டும் ஜெயலலிதா, செய்வீர்களா, நீங்கள் செய்வீர்களா என கேட்டார்.

செலம் பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா திமுகவை விமர்சித்து பேசினார், அதில் அதிமுக ஆட்சி காலத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று மக்கள் அமைதியாக வாழ்கின்றனர் என்றார். அதிமுகவில் தொண்டர்கள் அதிகம் இருக்கிறார்கள் ஆனால் திமுகவில் குண்டர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். திமுகவில் குண்டர்கள் இருக்கிறார்கள் என்பதை கருணாநிதியே சொல்லியிருக்கிறார் என்றார் அவர்.

சேலத்தில் திமுகவினர் கடந்த ஆட்சியில் நில அபகரிப்பில் ஈடுபட்டார்கள், அதனை இந்த ஆட்சியில் மீட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜெயலலிதா, திமுகவினர் வாக்கு கேட்டு வந்தால் அவர்களை விரட்டியடியுங்கள் என கூறி செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா என்று கேட்டார்.

No comments :

Post a Comment