500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இராமேஸ்வரத்தில் உண்ணாவிரதப் போராட்டம்

Share this :
No comments


இலங்கையில் உள்ள 13 மீனவர்கள் மற்றும் 95 படகுகளை விடுவிக்கக் கோரி 500-க்கும் மேற்பட்ட் மீனவர்கள் இராமேஸ்வரம் மாவட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 12-ஆம் தேதி, இராமேஸ்வரம் மாவட்டம் பாம்பனில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 13 மீனவர்களையும், 3 நாட்டுப் படகையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர்.

இதையடுத்து ஏப்ரல் 14-ஆம் தேதி இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் பறிக்கப்பட்ட படகுகளை விடுவிக்கக் கோரி இராமேஸ்வரம் மற்றும் பாம்பன் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

நாட்டுப்படகு சங்க தலைவர்கள் ராயப்பன், அருள் அகிய இருவரின் தலைமையில் நடந்த போராட்டத்தில் மீனவர்கள் மற்றும் பறிக்கப்பட்ட படகுகளை மத்திய, மாநில அரசுகள் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், இலங்கையில் உள்ள 13 மீனவர்கள் மற்றும் 95 படகுகளை விடுவிக்கக் கோரி இன்று இராமேஸ்வரத்தில் 500-க்கும் மேற்பட்ட் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

No comments :

Post a Comment