வெட்கம், வெட்கம் - கி.வீரமணி

Share this :
No comments


அதிமுகவினர் தேர்தலை முன்னிட்டு பணத்தை கோடிக்கணக்கில் பதுக்கியுள்ள சம்பவம் வெட்கிதலைகுனிய வேண்டியுள்ளது என கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.


இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையுலி கூறியுள்ளதாவது:

தமிழ்நாட்டின் சட்ட மன்றத்திற்கு வரும் மே 16 ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் ஜனநாயகத் தேர்தலா அல்லது பணநாயகத் தேர்தலா என்று நாடெங்கும் கேள்விகள் கிளம்பும் வண்ணம் ஆங்காங்கு கோடிக்கணக்கில் அதிமுகவினர் பணத்தை பதுக்கிவைத்துள்ளனர்.

இதை தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையும் கைப்பற்றிய பணம் மற்ற மாநிலத்தவரையும் உலகத்தாரையும் வியக்கச் செய்யும் வெட்கத்தால் நாம் தலை குனிய வேண்டிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

எனவே, பணத்தை அளித்து வாக்குகளை விலைக்கு வாங்கலாம் என்னும் ஜனநாயகத்தைப் பணநாயகமாக ஆக்கும் முயற்சிக்கு வாக்காளப் பெருமக்கள் பலியாகி விடக் கூடாது.

மேலும், தேர்தல் ஆணையம் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாகவும் நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment